3/25/11

வெயில்



நிழலை எல்லோரும்
 நினைக்கும் நேரம் 
வந்தாச்சு ...
தர்பூஷினியும் சாலைகளில் கொட்டியாச்சு !!
குளிர் சாதன பெட்டியின் 
விற்பனையும் கூடியாச்சு !!
முத்து முத்தாய் வேர்வையும் 
பூத்தாச்சு ..!!!
பருத்தி ஆடைக்கு எல்லோரும் 
மாறியாச்சு !!
சந்தனம் பேசியல் போட்டாச்சு ...


அயோ ..சொல்லிகிட்டே போகலாம் ..இப்படி வெயில் பத்தி. வெயிலின் கொடுமை ரொம்பவே இருக்குங்க ..இந்த வெயில் காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ் தருகிறேன் ...


*  முதலில் வெயிலில் போவதை தவிர்க்க வேண்டும் .
*.  அபப்டியே போக நேர்ந்தால் கலர் குடைகளை உபயோகிக்கலாம் .
      வண்டியில் போகும் போது என்ன செய்ய என்று கேட்பது கேட்கிறது ....
      கேப் வெச்சுக்கலாம் ... சன் கண்ணாடிகள் .அப்படி ஏதாவது..

*.நிறைய ஜூஸ் குடிக்கணும் .முக்கியமா எலுமிச்சை ,சாத்துக்குடி .

*.காலையில் வெறும் வயிறில் 500 மில்லி குடித்தால் உடம்பு dehyration   ஆகாமல் இருக்கும் .

* வெந்தயம் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்தால் உடல் சூடு தணியும் .
* வெள்ளரிக்காய் நிறைய சாப்பிடலாம் .
*    தர்பூசணி ஜூஸ் தினமும் குடித்தால் ரொம்ப நல்லது .
* எல்லோரும் வாங்கி சாப்பிடும்  விலையில் கிடைக்கிறது..
* ஜில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம் .
* பனை விசிறியில் இருந்து வரும் காற்று குளிராக இருக்கும் .
* மோர் குடிக்கலாம் .


இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கும் ..தெரிந்தால் என்னுடன் பகிருங்கள் ...


2/6/11

கிறுக்கல்

கண்ணில் விழும் தூசி
கூட உன் கைகளை தேடுகிறது..
நான் தேட கூடாதா ??

---------------------------------------------------------------------------------------------------
உன் முகம் காணவே
விரும்புகிறேன் ...
என்னை காணும்
போதும் !!!

----------------------------------------------------------------------------------------------------
பிறந்த நாள் காணும்
நாள் ...ஒரு வயது
கூடி வயதானாலும்
என் அம்மாவிருக்கு
என்றும் நான்
குழந்தையே !!!

----------------------------------------------------------------------------------------------------